Wednesday, 21 October 2015

10 dead, 13 wounded in Tamil Nadu road accident


திருச்சி சமயபுரத்தை அடுத்த இருங்களூர் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த 9 பேரின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து, இருங்களூர் என்ற இடத்தில் நேற்றிரவு சாலையோரம் இரும்புக்கம்பிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname