Thursday 22 October 2015

தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்:நக்மா


தமிழகத்தில் போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அதை முதலில் கவனிக்க வேண்டும். மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதை விட்டுவிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சி என்பது தானாக நடந்து விடாது என அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname