Wednesday 21 October 2015

10 dead, 13 wounded in Tamil Nadu road accident


திருச்சி சமயபுரத்தை அடுத்த இருங்களூர் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் இறந்த 9 பேரின் உடல்கள் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து, இருங்களூர் என்ற இடத்தில் நேற்றிரவு சாலையோரம் இரும்புக்கம்பிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Comments System

Disqus Shortname